Wednesday, November 5, 2014


உடல்நிலை சரியில்லாததால் சில நாட்களாய் அலுவலகத்திற்கு செல்லவில்லை. போனையும் எடுக்கவில்லை. நேற்று காலை இயக்குனரிடம் இருந்து ஃபோன். என்ன சொல்லப் போகிறாரோ என்ற தயக்கத்துடன் போனை எடுத்து ‘சார்...’ என்றேன். ‘சார்..குட்மார்னிங் சார்...இன்னைக்காவது ஆபிஸ் வருவீங்களா சார்...ரொம்ப இல்ல சார்..ஒரு ஒருமணி நேரம் வந்துட்டு போறீங்களா சார். நான் வேணும்னா வீட்ல பெர்மிஷன் கேக்கட்டுமா சார்’ என்று சிரித்தபடியே கேட்டார். அதற்கு மேல் வீட்டில் இருக்க தோன்றவில்லை.
முழு சுதந்திரமும் சுயமரியாதையும் ஒருசேர கிடைக்கும் இடமே சொர்க்கம் (!). ஆகஸ்ட் 5. இன்றோடு எங்கள் இயக்குனருடன் நான் இணைந்து சரியாய் ஒரு வருடம் ஆகிறது. 365 நாளும் தோழனாய், அண்ணனாய், குருவாய் மாறி மாறி அரவணைத்த உங்கள் அன்பிற்கும் பொறுமைக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள் சார்   

No comments:

Post a Comment